Sunday, January 26, 2014


2006 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் காலண்டர் அச்சிடும் போது, அரசு திட்டங்களை மக்கள் கவணத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், பிரத்தியேகமாக 12 ஓவியங்களை தீட்டி அளித்தேன். குறிப்பாக புதுச்சேரியில் அசையா சொத்துக்களான மனைகள் ,நிலங்களை வாங்கும் போது அதை பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் அதற்கு பத்திர செலவு பாதி கட்டணமே போதும் .இது மிக முன்னோடியான திட்டம், இன்றும் இங்கே புதுச்சேரியில் நடை முறையில் உள்ளது. இது போன்ற திட்டங்களை 12 மாதங்களுக்கும் வரைந்து கொடுத்தேன் . ஒவ்வொரு ஓவியமும், தீட்டப்பட்டு முடியும் தறுவாயில் அது உடணடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தலைமைச்செயலர் போன்ற அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்ததும்,ஓவியங்கள் முழுமை அடையும். பல ஓவியங்கள் சிறப்பாக வந்தன.2005 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இந்த பணி என்னிடம் வழங்கப்பட்டது, ஐந்து மாதங்களுக்கான ஓவியங்கள் நிறைவடைந்த சமயம் எனது மகள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டாள், 5 மணி நேரத்தில் சென்னை கொண்டு செல்ல வேண்டும் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதால் சென்னை சென்று கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தோம், காலண்டர் பணியை இடையில் தடைபட்டதை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். ஓவியர் ராஜராஜனின் மகள் அவசர சிகிச்சைக்காக சென்னையில் சேர்க்கப்பட்டுள்ளார்,அதனால் தாமதம் ஆகின்றது என்றனர். சரி வேறு யாரிடமாவது கொடுத்து பணிகளை முடிக்கலாமே என்றாராம், உங்களின் கவணத்துக்கு வரும் முன்னரே சில இடங்களில் கொடுத்தோம் ஐயா, ஆனால் ஓவியங்கள் முழுமையாக வேறுபடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரி அவர் எப்போது சென்னையில் இருந்து வருவார் என்று கேளுங்கள் என முதல்வர் சொன்னதும் எனக்கு போன் செய்து , சார் எப்போது புதுச்சேரி வருவீர்கள் ? என்றனர். இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் , வந்ததும் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் முடித்து விடுகிறேன், முதல்வரிடம் நம்பிக்கையோடு தெரிவியுங்கள் என்றேன். டிசம்பர் 17 ஆம் தேதி எனது மகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.புதுச்சேரி வந்ததும் உடனடியாக தடை பட்ட காலண்டர் ஓவிய பணியினை ஆரம்பித்தேன் 6 நாட்களுக்குள் முழுமையாக எல்லா திட்டங்களுக்கான ஓவியங்களும் முடிந்ததும், ஒரே வாரத்தில் புதுச்சேரி அரசு அச்சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலண்டரின் அச்சு வேலைகளை இரவு பகல் பாராது பணியாற்றி முடித்தனர். 2006 ஜனவரி முதல் தேதி புதுவை அரசு காலண்டரை வெளியிட்டது.அந்த காலண்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிசம்பர் மாதம் வந்ததும் அந்த பணியின் நினைவுகள் வந்தது , 2006 , டிசம்பர் மாத பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூண்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கும் காட்சியை வரைந்திருந்தேன். அரசு திட்டங்களை ஓவியமாக வ்டிவமைக்கப்பட்ட காலண்டர் பற்றிய செய்தியை இந்து ஆங்கில நாளிதழும் ,மாலைமலர் நாளிதழும் விரிவாக செய்திகளை வெளியிட்டு இருந்தன. அந்த காலண்டரின் கடைசி பக்கத்தினை அன்பு நண்பர்களிடம், பகிர்ந்து கொள்கிறேன்.

புதுவை அரசு காலண்டர்-2006

No comments:

Post a Comment