Monday, January 20, 2014

புதுச்சேரியில் உள்ள சின்ன வீராம்பட்டிணம் பழமையான மீனவகிராமம். அங்குள்ள ஒரு வசதியான மீனவர் ஒருவரின் பயன்படுத்தபடாத பழங்கால வீடு சில வருடங்களுக்குமுன் தொடர் மழை காரணமாக ஓடு வேயப்பட்ட கூரை சரிந்து விழுந்தது. மழையில் நனைந்த சுவரில் ஓவியம் கானப்படுவதை அறிந்த உள்ளூர் ஓவியர் .திரு.திருநாவுக்கரசு (எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்) என்னிடம் தகவலை தெரிவித்தார். நான் எனது மாணவர்கள்,முருகன்.பிரபாகரன் ஆகியோரை அழைத்துக்கொண்டு சின்ன வீராம்பட்டிணம் சென்றேன். மழை ஈரத்தில் ஓவியம் ஓரளவு தெரிந்தது. வீட்டு உரிமையாளரின் உறவினரிடம் அனுமதி பெற்று ,சுவரின் சுன்னாம்பு படலத்தை கவணமாக நீக்கிணோம். அப்போது சுமார் 90 ஆண்டுகளுக்கு முந்தைய வைணவ ஓவிய தொகுப்பு காணப்பட்டது.அது பிந்தைய மராத்தியர் காலத்தின் சாயலை ஒட்டியதாக இனம் காண முடிந்தது.கடந்த 250 ஆண்டுகளாக பிரெஞ்சு காலணியாக திகழ்ந்த புதுச்சேரியில் எங்கும் காணப்படாத தமிழக கலைதொடர்ச்சியின் அடையாளமான பாரம்பரிய ஓவியதொகுப்பு புதிய பதிவாக உணரமுடிந்தது. 1750 களில் புதுச்சேரி முழுமையான பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த போது நகரம் இரண்டு தடவைக்கு மேல் முற்றாக மாற்றிஅமைக்கப்பட்டும்.புதுப்பிக்கப்பட்டும் இருந்த வரலாறு உண்டு.அதன்காரணமாக நகருக்கு வெளியில் உள்ள் ஒரு சில கோவில்கள் தவிர 300 வருடங்களுக்கு முந்தய எந்த பாரம்பரிய அடையாளங்களும் தமிழகத்தை போன்ற கட்டிடங்கள் ,சிற்பங்கள்,ஓவியங்கள் எதையும் காணமுடியாது என்ற கருத்தாக்கத்தில் உறைந்த வரலாற்றின் புதிய பக்கமாக இந்த ஓவிய தொகுப்பு கானப்பட்டது.17 ஆம் நூற்றாண்டுக்கு பின் மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையில் செல்வாக்கு குறைந்தபின் ஆங்கிலேயர் ஆட்சியால் ஆதரவை இழந்த ஓவியர்கள் வெளிமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி பரவினர், கிராமங்க்ளுக்கு சென்று வசதியானவர்களிடம் வாய்ப்பு பெற்று சில கோயில்களிலும், வீடுகளிலும் ஓவியங்களை தீட்டி வாழ்க்கையை நடத்தினர். இந்த ஓவியமும் அத்தகையதே.இந்த வைணவஓவிய தொகுப்பில் பாமா,ருக்மணியுடன் கிருஷ்ணன் காட்சிதருவதும்.சில வீரர்களும்,சிப்பாய்களும் வாள்,ஈட்டி, துப்பாக்கியுடன் காணப்படுகிறது, மிக குறைந்த தரமுடைய சுண்ணாம்பு காரை மீது மஞ்சள் ,சிகப்பு, பச்சை, காவி,போண்ற வண்ணங்களின் மீது கறுப்பு கோடுகளால் ஓவியம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.பரிமாணமற்ற நாட்டுபுற ஓவிய சாயலான இந்த ஓவியம் புதுச்சேரிக்கு அரிது. உடனடியாக பத்திரிக்கை ,தொலைக்காட்சி நன்பர்களுக்கு தகவல் கொடுத்தேன். மறுநாள் தினமனி,தினகரன். உள்ளூர் தொலக்காட்சி செய்திகளில் வெளியானது. அப்புறம் சிலமாதங்களில் அந்த சுவர்களும் இடிந்து விழுந்துவிட்டது.இந்த வரலாற்று ஆவணம் பதிவே இல்லாமல் போய்விட்டது.தமிழ்நாடு போல புதுச்சேரியில் தொல்பொருள் துறை இருப்பதாக தகவல் உள்ளது.கடந்த இருபது வருடமாக புதுச்சேரி தொல்பொருள் துறையை தேடுகிறேன்.சரியான விபரம் யாரும் சொல்ல மறுக்கிறார்கள்.வரலாற்று ஆர்வம் கொண்ட சில தனியார்களும், அரசு துறையை சேர்ந்தவர்களும் இதுபோண்ற சமாச்சாரங்களை சொந்த முயற்சியில் தேடியுள்ளனர் என்றாலும் அவர்களின் முயற்சிக்கும் ஆதரவில்லாமல் போனதால் வரலாற்று தொன்மை கொண்ட அரிக்கமேடு அகழ்வாய்வும் பெருமளவு நின்றுபோனது.புதுச்சேரியில் அதுபோல அருங்காட்சியகம் ஒன்று இருந்தது..........



100 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரியின் பாரம்பரிய ஓவியம்.
ஓவியர் ஆர்.ராஜராஜன் மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் திருநாவுக்கரசு,முருகன்,பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்து வெளியிட்ட ஓவியம்.இடம் சின்னவீராம்பட்டிணம்.

Add caption

No comments:

Post a Comment