Sunday, January 19, 2014

திருவலம்புரநாதர் திருக்கோவில் 
மேலப்பெரும்பள்ளம்

குளிர்ந்த நீரை தரும் கிணறு, வீடுகளிளும்,கோவில் போன்ற இடங்களிலும் மக்களின் தாகத்தினை தீர்க்கும் பெரும் பங்கு கிணற்றுக்கு உண்டு, மிக கச்சிதமான, அழகான கட்டுமானங்களால் அமைக்கப்படும் கிணறுகள் பல நூற்றாண்டுகள் வரை பயன் படுவதுண்டு.எத்தனை கோடை வெயில் வாட்டினாலும், சிலீரென்ற கிணற்று நீரில் குளிப்பது ஓர் சுகம். சில கிணறுகளில் தண்ணீர் குளிர்ச்சியாக மட்டுமல்லாது சுத்தமான குடி நீராகவும் மக்களின் தேவையை பூர்த்தி செய்தன. அப்படி பட்ட அரிதான கிணறுகளில் ஒன்று இது. இடம் நாகை மாவட்டம் பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலையூர் கடைஅனை ( சட்ரேஸ் ) . இதற்கு தென்புரம்செல்லும் சாலைவழியே சென்றால் அங்கு அமைந்துள்ள திருவலம்புரநாதர் திருக்கோவில். சமீபத்தில் இந்த கோவிலுக்கு சென்றுவந்தேன். இந்த கிணற்றருகே வெகு நேரம் அமர்ந்து இருந்தேன்.

அமைதியும்,தனிமையும் இந்த கோவிலின் தனித்துவம்.சமயகுரவர்களின் பாடல்களால் போற்றப்பட்ட 1400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது , அனேகமாக இது "மாடக்கோவில்" வகையை சார்ந்தது என கருதுகிறேன். நெடிந்து உயர்ந்துள்ள ஆண்பனை மரம் தலவிருட்சம்.

தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள மிக பழமையான கோவிலான இதை இருந்து கவணிப்பதற்கு உரிய அதிகாரி பற்றாக்குறை தெரிகிறது. இரண்டு பணியாளர்கள் இருந்து வருபவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இந்த வலம்புரநாதர் கோவில் மட்டுமல்லாது வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு மூன்று கோவில்களையும் ஒரே நிர்வாக அதிகாரியால் நிர்வகிக்கப் படுகிறது. பூசைகள் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். கருவறைக்கு வெளியில் உள்ள சுற்று சுவர்களில் மிக அழகும் ,நுணுக்கமும் மிக்க கருங்கல் புடைப்பு சிற்பங்கள் மனதை வருடுகிண்றன, கோவிலின் வரலாற்று தரவுகளை தாங்கிய அற்புதமான கல்வெட்டுக்கள் இக்கோவிலின் உயர்ந்த தரத்திற்கு அடையாளம். இக்கோவிலில் சில இடங்களில் பல்லவர்களின் சிற்ப தொடர்ச்சியும், பிற்கால சோழர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றது. பட்டிணத்தார், அப்பர்,திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார் போன்றவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சென்றுள்ளது இதன் சிறப்பு.

No comments:

Post a Comment