Monday, January 27, 2014



"நாட்டிய பேராசான்"
காட்டுமன்னார் கோவில் முத்துக்குமரப்பிள்ளை.

ஓவியர்.ஆர்.ராஜராஜன்.


நாட்டிய பேராசான்  காட்டுமன்னார்கோவில் .முத்துக் குமரப்பிள்ளை


தற்கால நாட்டிய மரபின் மறுமலர்ச்சிக் கால மாமேதை. பரதக்கலை நட்டுவாங்கக் கலையின் தனிப்பெரும் ஆளுமை. சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோயில் எனும் கிராமத்தில் 1874 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரு.முத்துக்குமரப் பிள்ளை அவர்கள் பிறந்தார்.இவரின் அக்காள் கண்ணம்மாள் இவரை விட மூன்று வயது மூத்தவர்.உள்ளூர் சிவன் கோவிலில் இறைப்பணி ஆற்றினார்.
காலம் காலமாக சதிர்கலையை சார்ந்திருந்த அந்த குடும்பம் காலச் சூழலுக்கேற்ப பரதக் கலையை பயிற்றுவிக்கும் சமூக மாற்றத்துக்கு நகர்ந்தது. தமது 19 ஆம் வயதிலேயே திரு. முத்துக்குமரப்பிள்ளை நாட்டியவகுப்பை குருக்குலமாக தொடங்கினார். அத்துடன் இசைவகுப்பையும் கவனித்தார்.தமிழ்,தெலுங்கு,சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அவரின் போதனைகளுக்கு பேருதவி புரிந்தன.

இவரிடம் நாட்டியம் பயின்ற பலர் காட்டுமன்னார் கோயில் நாட்டியமரபை உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று பிரகாசித்ததனர். எம்.கே.சரோஜா ( இவர் முத்துக்குமரப்பிள்ளையின் மகள்) மிருனாளினி சாராபாய்,முத்துசாமி பிள்ளை, கமலா, ராம்கோபால், நள நாஜன், ஜனக் கென்ட்ரி, போன்றவர்கள் குறிப்பிடதக்கவர்கள்.
கிராம வாழ்க்கையும், நகரவாழ்க்கையும் வேறுபாடின்றி பிள்ளையவர்களின் கலைத்திறனுக்குஏற்ப இயைந்து சென்றன. இசையிலும், நாட்டியத்திலும் திளைத்திருந்த மேதமையை செம்மையாக்கல் மூலமாக அறிவு வயமான எழுத்துவடிவமாக மாற்றிய முயற்சி அவருக்கு சாத்தியமாகியது. ஆம், 1921 ஆம் ஆண்டு "ஸங்கீத ஸ்வரக் ஞான போதினி" எனும் இசைநூலை எழுதிமுடித்தார்.அது 29 அத்தியாயங்களை உள்ளடக்கியது. அந்நூலை சென்னை திருவல்லிக்கேணி ரூபர்ட் அண்ட் கம்பெனியால் அச்சிடப்பட்டு, 2 ரூபாய் விலைக்கு வெளியிடப்பட்டது. 10.5.1943 ஆம் ஆண்டு இவரின் ஆறு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை மாயவரம் பெரியகோவில் அவயம்பாள் சன்னதியில் மிக விமரிசையாக நோட்டிஸ் அடித்து முக்கியஸ்தர்களை அழைத்து நடத்தினார்.

கலை சிந்தனையால் மட்டுமே இவரது மனம் வியாபித்து இருந்ததால் பணம் மீதான கவணம் இல்லை. முதுமை, மேதமை இரண்டும் மனிதனை முடக்கிவிடும்.
தமது அளப்பறிய போதனைகளின் வாயிலாக பல மேதைகளை உருவாக்கிய இந்த மாமேதை வாழ்வின் இறுதிகாலத்தில் யாரிடமும் எந்த உதவியையும் பெற விரும்பவில்லை. 1959 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய சங்கீத நாடக அக்கடமி சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதினார். பல நாட்டிய மாணவர்களை உருவாகினேன், எனது நட்டுவாங்க மரபு மிகுந்த மதிப்பு மிக்கது. வேறு யாரிடமும் உதவி பெற விரும்பாத நிலையை குறிப்பிட்டு , எனக்கு மாதம் ரூ.100/ மட்டும் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தால் எஞ்சிய காலத்துக்கு பயனாக அமையும், எனவே உதவி செய்யுங்கள் என கோரி இருந்தார். அவர் தனது 86 ஆம் வயதில் இயற்கை எய்தும் வரை அக்கடமியில் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை. இருப்பினும் அவர் நம்மோடு வாழ்ந்துகொன்டே இருக்கிறார் பதிவுகளாக.

அன்பு நண்பர்களே, எத்தனை மேதமைகள் , அபார திறமைகள் ,இருந்தாலும் நமது சமூக கட்டமைப்பு என்பது இதுதான்.

இவரை பற்றிய விரிவான கட்டுரை " ஸ்ருதி " செப்டம்பர் 1993 இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.நான் சில தகவல்களை மட்டும் மிக சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment