Monday, January 20, 2014

கடந்த சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் திரு தமிழவேள் எழுதிய வரலாற்று நூலுக்கான அட்டை படம் வேண்டும் என கேட்டார்கள் .அவரின் புகைப்படம் சரியாக இல்லை என கூறி புத்தகம் ஒன்றில் அச்சாகி இருந்த (half tone ) படத்தை தந்தார்கள். ஒரிஜினல் படத்தில் ராணுவ உடையுடன் சிறு வயது இளைஞராக காணப்பட்டவரை கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்தில் அமைந்தால் நல்லது என்றார்கள்.மூன்று மாதிரி படங்கள் திருப்தியாக வரவில்லை. அவை அவரின் போர் குணத்துக்கு ஈடாக இல்லை என்பது எனக்கே தெரிந்தது.கடைசியாக தீட்டிய இந்த ஓவியத்தை எனது நெருங்கிய நண்பர்கள் பலரிடம் காண்பித்தேன்.நன்றாக வந்துள்ளது,எனினும் அவர்களிடம் கருத்து கேளுங்கள் என்றார்கள்.ஓவியத்தை வெகுநேரம் பார்த்த அவர்களிடம் ”திருப்தியாக வரவில்லை என்றால் இன்னும் முயற்சி செய்கிறேன்” என்று நான் கூறியபோது நாங்கள் எதிர்பார்த்த முகம் இதுவே ! திருப்தி என விடைபெற்றார்கள். சென்னையில் அந்தநூல் வெளியிடப்பட்டது. 50வருடங்களுக்கு பிறகு தியாகி .இமானுவேல் சேகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்தது.


திரு. இமானுவேல்  சேகரன்

No comments:

Post a Comment